செய்திகள்
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு- அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவுவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வரும் ஏப்.18ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணம் தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.