செய்திகள்
பெண்ணின் தலையில் மல்லிகை பூ சரத்தை சூட்டிய மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்

பெண்ணுக்கு பூச்சூடி மகிழ்ந்த மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்

Published On 2021-03-27 10:11 GMT   |   Update On 2021-03-27 10:11 GMT
புதுவையில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரி:

புதுவைக்கு ஒரு நாள் பயணமாக வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து காரைக்கால் செல்வதாக இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு புதுவையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினார்.

அவரை வரவேற்கும் விதத்தில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. அப்போது பெண்கள் ஆரத்தி, மாலை அணிவித்தனர்.

நெல்லித்தோப்பு பெரியார் நகர் கஸ்தூரிபாய் வீதியில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் சென்றபோது, அங்கிருந்த பெண் ஒருவர், மத்திய மந்திரி தலையில் சூடிக்கொள்ள மல்லிகை பூ சரத்தை கொடுத்தார்.

அதை மகிழ்வுடன் அவர் பெற்றுக்கொண்டு நடந்து அடுத்த வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த பெண்ணின் தலையில் பூ இல்லாமல் இருந்ததை பார்த்தார். அவரை அழைத்து அந்த பெண் தலையில் மல்லிகை பூ சரத்தை சூட்டினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News