செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மாற்றுத்திறனாளிகள் உள்பட 35 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-17 11:27 GMT   |   Update On 2021-07-17 11:27 GMT
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தத்தனூர் பொட்டக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 12 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15 பேரும், மாற்றுத்திறனாளிகள் 8 பேரும் என மொத்தம் 35 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News