வழிபாடு
11-ம் நாள் மாசித்திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் இன்று இரவு தெப்ப உற்சவம்
12-ம் திருவிழா நாளை மாலை சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகள் வழியாக வலம் வருதல் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேட்ட சப்பரத்தில வீதி உலா நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமியும் அம்பாளும் 8 ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 10-ம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
11-ம் திருவிழாவான இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்திற்கு வருகிறார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் அருகில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபம் வந்து அங்கு இரவு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழா நாளை மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகள் வழியாக வலம் வருதல் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேட்ட சப்பரத்தில வீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை (பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமியும் அம்பாளும் 8 ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 10-ம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
11-ம் திருவிழாவான இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்திற்கு வருகிறார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் அருகில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபம் வந்து அங்கு இரவு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழா நாளை மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகள் வழியாக வலம் வருதல் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேட்ட சப்பரத்தில வீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை (பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.