ஆன்மிகம்
வரதராஜ பெருமாள்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-03-16 06:42 GMT   |   Update On 2021-03-16 06:42 GMT
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா வரும் 20-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 6.30 மணிக்கு திருக்கொடி ஏற்றம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினசரி காலையில் பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு திருமஞ்சனமும், இரவில் வரதராஜபெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

விழாவின் 7-ம் நாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.

மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11ம் நாளான 30-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு தீர்த்தவாரி இடம்பெறுகிறது.
Tags:    

Similar News