உள்ளூர் செய்திகள்
வீட்டில் புகுந்து நகை-பணம் திருடியவர் கைது
வீடு புகுந்து நகை-பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், ஜன.5
சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி வெள்ளையன் வட்டம் மலங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னதாயி (வயது 65). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 28 தேதி வீட்டை பூட்டிவிட்டு மின்சாரம் கணக்கிடும் மீட்டர் பாக்ஸ் மீது வீட்டு சாவியை வைத்து விட்டு மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், தோடு உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்ற வாலிபரை கைது செய்தனர்.இவரிடமிருந்து திருடுபோன பொருட்களை போலீசார் மீட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் , நாகராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.