செய்திகள்
கோப்புப் படம்

பயங்கரவாதிகள் அட்டூழியம் - ஸ்ரீநகரில் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை

Published On 2021-11-07 20:40 GMT   |   Update On 2021-11-07 20:40 GMT
காஷ்மீர் பகுதியில் குறிப்பாக, ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் படாமல்லு பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் எஸ்டி காலனியில் வசித்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தவுசிப் அகமது என்பவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

அவரது வீட்டின் அருகே நடந்த இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

பயங்கரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இது கோழைத்தனமான தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News