செய்திகள்
கைது

சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-13 13:27 GMT   |   Update On 2021-01-13 13:27 GMT
சோழவந்தான் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காடுபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணை செய்தபோது மேலக்கால் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 26) என்றும், அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News