உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 50), விவசாயி.
சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பரமசிவன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.