செய்திகள்
ஊத்தங்கரை அருகே நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் சுவேதா (வயது 21). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.