செய்திகள்
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,863 பேருக்கு கொரோனா: 54 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 7,863 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 7,863 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,69,330 ஆக உயர்ந்துள்ளது. இன்று 54 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,238 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 6,332 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 20,36,790 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.89 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.41 ஆகவும் உள்ளது.
இதுவரை 1,64,21,879 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 21,69,330 மாதிரிகள் பாசிட்டிவ் முடிவுகளை கொண்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் 13.21 ஆகும்.
இன்று மும்பையில் 849 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் பகுதியில் 809 பேரும், அமராவதி பகுதியில் 483 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.