உலகம்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை- துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு

Published On 2022-01-23 03:35 GMT   |   Update On 2022-01-23 03:35 GMT
மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
துபாய்:

துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. எனினும் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்க வேண்டும்.

* எந்தவிதமான அறிகுறியும் இருக்கக்கூடாது.

* இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும்.

* சரியான நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விதிமுறையானது கடந்த 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற சுற்றறிக்கையினை அபுதாபி சுகாதாரத்துறையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News