ஆன்மிகம்
சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து சென்ற போது எடுத்த படம்.

சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு

Published On 2021-11-23 03:52 GMT   |   Update On 2021-11-23 03:52 GMT
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருபுவனத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கும்பகோணம் வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலை அடைந்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு சோமவார காவடி கமிட்டி சார்பில் ஏராளமான பக்தர்கள் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து செல்வது வழக்கம்.

நேற்று 140- வது ஆண்டாக திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளை எடுத்து சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருபுவனத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கும்பகோணம் வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலை முருகன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமிமலை முருகன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவரான முருகன் மற்றும் வள்ளி தெய்வானை உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற பாதையாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சென்றனர்.
Tags:    

Similar News