செய்திகள்
காயமடைந்த சாரதி.

சிறுமியை காதலித்த வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2021-07-19 11:06 GMT   |   Update On 2021-07-19 11:06 GMT
காதல் விவரத்தை சிறுமியின் பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த மதி என்பவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர்களது காதல் விவரத்தை சிறுமியின் பெற்றோரிடம் அதே பகுதியை சேர்ந்த மதி என்பவர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் சாரதியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாரதி மதியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த மதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாரதி மீது சரமாரியாக குத்தினார். 

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
Tags:    

Similar News