உள்ளூர் செய்திகள்
கைது

காசிமேடு கடற்கரையில் தனிமையில் இருந்த காதலர்கள் கையை வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது

Published On 2022-05-07 08:16 GMT   |   Update On 2022-05-07 08:16 GMT
காசிமேடு கடற்கரையில் தனிமையில் இருந்த காதலர்கள் கையை வெட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த பெண் நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் தான் பணி முடித்து வீடு திரும்பிய போது சேணிஅம்மன் கோவில் தெருவில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் தன்னை வழிமறித்து கத்தியால் கையை வெட்டி செல்போன் பறித்ததாக புகார் கூறியிருந்தார்.

இதனையடுத்து போலீசார் உடனடியாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

ஆனால் அந்த பகுதியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரியவந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை செய்ததில் இந்த சம்பவம் காசிமேடு கடற்கரையில் நடைபெற்றது தெரியவந்தது.

சம்பவத்தன்று புகார் கூறிய அந்தப் பெண் காதலனுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் காதலர்கள் இருவரையும் கத்திமுனையில் மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். தர மறுக்கவே இருவரையும் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பரித்து ஒன்று தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து காசிமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் பாரத் முகேஷ் என்ற 3 வாலிபர்களையும் தனிப்படை போலீசார் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர் இவர்கள் 3 பேரையும் கைது செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர் சம்பவம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்த அந்தப் பெண்ணை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

Similar News