செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

அசாமின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு இன்றும் தளர்வு

Published On 2019-12-15 03:43 GMT   |   Update On 2019-12-15 03:43 GMT
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.
கவுகாத்தி:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, அசாமின் கவுகாத்தியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.

மேலும், அசாமின் திப்ரூகர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், அசாமில் இணையதள சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News