செய்திகள்
தற்கொலை

கோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2019-12-07 11:59 GMT   |   Update On 2019-12-07 11:59 GMT
கோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி உத்தம பிரியா (வயது 32). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் உத்தம பிரியாவிற்கு உடல்நிலை சரியாகாததால் மன வேதனையுடன் காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News