செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல் - இதுவரை 13,542 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2021-09-17 18:07 GMT   |   Update On 2021-09-17 18:07 GMT
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்று 8,567 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
சென்னை:

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கி செப்டம்பா் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களில் 13,542 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

3-வது நாளான இன்று கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7,208 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,212 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும் என மொத்தம் 8,567 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

Tags:    

Similar News