செய்திகள்
ராயக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவர் கைது
ராயக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி கிராமத்தில் பாஞ்சாலியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கோவிலில் இருந்த 3 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அத்திப்பள்ளி பக்கமுள்ள சின்ன தாசரஅள்ளியை சேர்ந்த லட்சுமணன் (வயது 35) என்பவா் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.