உள்ளூர் செய்திகள்
கைது

புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு சாராயம் கடத்திய வாலிபர் கைது

Published On 2022-01-25 12:33 GMT   |   Update On 2022-01-25 12:33 GMT
புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரகம் ரங்கநாதபுரம் அருகே புதுச்சேரியிலிருந்து கள்ளத்தனமாக சாராயம் கடத்தி வருவதாக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு குழுவுக்குதகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் சோதனை செய்ததில் புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிருஷ்ணாநகரை சேர்ந்த தினகரன் (வயது 26) என தெரிய வந்தது. உடனே போலீசார் தினகரனை கைது செய்தனர்.

அதன் அடிப்படையில் கோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து 500 பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News