ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் லட்ச வில்வார்ச்சனை

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் லட்ச வில்வார்ச்சனை

Published On 2020-12-04 02:59 GMT   |   Update On 2020-12-04 02:59 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் உள்ள யாக சாலை மண்டபத்தில் லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருமலை :

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் உள்ள யாக சாலை மண்டபத்தில் நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது. 

அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி ஏகாந்தமாக நடந்தது. அதில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் சூப்பிரண்டு பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News