ஆன்மிகம்
தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு யாகம்

தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு யாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-11-29 08:42 GMT   |   Update On 2021-11-29 08:42 GMT
தகட்டூர் பைரவர் கோவிலில் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது.
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பைரவர் அவதரித்த நாளான நேற்று கோவிலின் மகா மண்டபத்திற்கு எதிரே ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அதன் பின்னர் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், கோவில் எழுத்தர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News