உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை பஸ் நிலையம் அருகே பனங்கிழங்கு விற்பனை நடைபெறுகிறது.

தேவகோட்டையில் பனங்கிழங்கு விற்பனை அதிகரிப்பு

Published On 2022-01-10 09:39 GMT   |   Update On 2022-01-10 09:39 GMT
தேவகோட்டை பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. கிராமங்களிலிருந்து அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேக வைத்து மற்றும் வேக வைக்காத பனங் கிழங்குகளை தேவகோட்டை நகரில் வியாபாரம் செய்து வருகின்றனர். 

பனங்கிழங்கில் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சிதன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும்.பனங் கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

பூமியில் இருந்து பனங் கிழங்கை பிரித்தெடுக்கும்போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட  நோய்கள் குணமாகும். மேலும்வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பனங்கிழங்கை வேக வைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். 

பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங் கிழங்கு வாயு தொல்லை உடையது. இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப் படுகிறவர்கள் கருப் பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்ப்பதுடன் ஆரோக் கியத்துடன் வாழ வழிவகை செய்கிறது. இதனால் குறிப்பிட்ட பருவ காலத்தில் கிடைக்கும் பனங்கிழங்கை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

பனைமர தொழிலாளி களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ள போதும் அதை சார்ந்த தொழில் முன்னேற்றம் காண மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News