ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்

Published On 2021-11-22 06:04 GMT   |   Update On 2021-11-22 06:04 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத சங்காபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 9 மணியில் இருந்து சங்கல்பம், யாக பூஜை, நைவேத்தியம், தீபாராதனை, மாலை 5 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு சந்தன அலங்காரம் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, இரவு 8 மணியளவில் உற்சவர் தட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளேயே வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

குருப்பெயர்ச்சி விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நேற்று நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் இருந்து கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News