செய்திகள்
சிக்கண்ணாஅரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணியும்,காலேஜ் ரோட்டில் சாலை அமைக்கப்படுவதையும் காணலாம்.

திருப்பூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 4,409 பயனாளிகளுக்கு ரூ.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

Published On 2021-11-21 12:18 GMT   |   Update On 2021-11-21 12:18 GMT
திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கிறார்.
திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா நடக்கிறது. 

இதற்காக முதல்-அமைச்சர் கோவையில் இருந்து கார் மூலமாக நாளை மாலை திருப்பூர் வருகிறார். திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கிறார். 

தெற்கு அவினாசிபாளையம், கே.அய்யம்பாளையம், சின்னியகவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். புதுராமகிருஷ்ணாபுரத்தில் கட்டிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட ரூ.28.17 கோடி மதிப்பில் கட்டிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.  

திருப்பூர் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான பணிகள் உள்பட ரூ.10.41 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை உளபட 4,409 பயனாளிகளுக்கு ரூ.55 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் விழா அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  

கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ. ஜெகநாதன் ஆகியோர் மைதானத்தை ஆய்வு செய்து அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டனர். கல்லூரி வளாகத்தில் சாலை அமைப்பு, விழா மேடைக்கு பின்புறம் பாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

அதுபோல் காலேஜ் ரோடு சாலை செப்பனிடப்பட்டு தார் தளம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டுள்ளது. திருப்பூர்மாநகரின் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
Tags:    

Similar News