செய்திகள்
ஆலங்குடி அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள மேற்கு மேலக்கோட்டையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 50). நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்து விட்டு கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால், திடுக்கிட்டு எழுந்த சின்னப்பொண்ணு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை தேடி பார்த்தனர். ஆனால், அந்த மர்ம நபர் சிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலீசில் சின்னப் பொண்ணு புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள மேற்கு மேலக்கோட்டையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 50). நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்து விட்டு கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால், திடுக்கிட்டு எழுந்த சின்னப்பொண்ணு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து மர்ம நபரை தேடி பார்த்தனர். ஆனால், அந்த மர்ம நபர் சிக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலீசில் சின்னப் பொண்ணு புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.