செய்திகள்
பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
பாஜக கட்சிக்கு எதிரான வாசகம் கொண்ட பதாகையை வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய போராட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பெண் ஒருவர் பாஜக கட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருக்கிறார். இனிமேல் பாஜக கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பது போன்ற தகவல்கள் பதாகைகளில் எழுதப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலான தேதிகளில் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இந்த புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலத்தில் செய்தியாளர்கள் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த போராட்டம் ஏப்ரல் 11, 2018 அன்று நடைபெற்றது. மேலும் இது, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் ஆகும்.
அந்த வகையில், தற்போது வைரலாகும் புகைப்படம் பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த புகைப்படம் சமீபத்திய போராட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.