ஆன்மிகம்
கோவிந்தாஷ்டகம்

ஆதிசங்கரர் அருளிய கோவிந்தாஷ்டகம் - வைணவம்

Published On 2021-04-16 01:27 GMT   |   Update On 2021-04-16 01:27 GMT
இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
கோவிந்தாஷ்டகம் (வைணவம்)

1. ஸத்யம் ஜ்ஞான மநந்தம் நித்ய மநாகாசம் பரமாகாசம்
கோஷ்ட ப்ராங்கண ரிங்கணலேல மநாயாஸம் பரமாயாஸம்
மாயாகல் பிதநாநாகாரம் புவனாகாரம்
க்ஷ்மாமாநாதமநாதம் ப்ரமணத கோவிந்தம் பரமானந்தம்

பூதேவி, லக்ஷ்மி தேவியாருக்கு நாதனான கோவிந்தனை வணங்குங்கள். அவர் ஸத்ய-ஞான-அனந்த ஸ்வரூபி, பூர்ணமானவர், மாட்டுத்தொழுவத்தில் தவழ ஆசைப்பட்டவர், களைப்பே இல்லாதவர், மாயையாகப் பலவடிவங்கள் கொண்டவர், உலகே உருவானவர் அவர்.

2. ம்ருத்ஸ்நா மத்ஸீஹேதி யசோதா தாடன சைசவ ஸந்த்ராஸம்
வ்யாதித வக்த்ரா லோகித லோகா லோக சதுர்தசலோகாலிம்
லோகத்ரயபுரமூல ஸ்தம்பம் லோகா லோக மநாலோகம்
லோகேசம் பரமேசம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

குழந்தையாய் இருந்தபோது, மண்ணைத் தின்றுவிட்டாயே, என்று யசோதை அவரை அடித்து, அதட்டினாளே! உடனே வாயை திறந்தபொழுது பதினான்கு உலகங்களையும் கண்டு அந்த யசோதையே களித்தாளே! இப்படி மூன்று உலகங்களின் ஆதார ஸ்தம்பம்போல் அமைந்தவரான, அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

3. த்ரைவிஷ்டபரிபுரக்னம்  பாரக்னம்பவரோகக்னம்
கைவல்யம் நவநீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம்
வைமல்யஸ்புட சேதோவிருததி விசேஷாபாஸ மனாபாஸம்
சைவம் கேவலசாந்தம் ப்ரணாமத கோவிந்தம் பரமானந்தம்

மூவுலகையும் பகைக்கும் அசுரரையழித்தவரும், பூபாரத்தையும், ஸம்ஸார நோயையும் அகற்றி கைவல்யம் தருபவரும், உணவேதும் வேண்டாதவரெனினும், உலகுக்கே உணவானவரும், நவநீதம் என்ற வெண்ணெயை உணவாகக் கொண்டவரும், தெளிவாய் இல்லாதவரின் மனதிலும் தெளிந்திருப்பவருமான கிருஷ்ண பரமாத்மாவை வணங்குங்கள்.

4. கோபாலம் பூலீலா விக்ரஹகோபாலம் குலகோபாலம்
கோபீகேலந கோவர்த்தன த்ருதிலீலா லாலிதகோபாலம்
கோபிர்ந்கத்த கோவிந்த ஸ்புட நாமாநம் பஹநாமானம்
கோதீகோசரதூரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

அவர் கோபாலன் எனப்படுகிறார். பூதேவியோடு விளையாடும் ஆணழகர், குலபர்வதமானவரும்கூட, கோபியரோடு விளையாடுதல், கோவர்தன மலையை தூக்கி நிறுத்தல் போன்ற விளையாட்டுகளால் யாதவரை மகிழ்வித்தவர், கோவிந்தா, கோவிந்தா எனப் பசுக்களே அழைத்து மகிழும் தூயவர். பல பெயருமுள்ளவர், பசுக்களின் புத்திக்குக்கூட எட்டும் அளவில் உள்ளவர். அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

5. கோபீமண்டல கோஷ்டீபேதம் பேதாவஸ்தமபேதாபம்
சச்வத்கோகுர நிர்தூத-உத்கத தூலி தூஸரஸெளபாக்யம்
ச்ரத்தா பக்திக்ரு ஹீதாநந்தம சிந்த்யம் சிந்தித ஸத்பாவம்
சிந்தாமணி மஹிமானம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
கோபிகைகளுக்குள் விளையாட்டாகக் கலகம் செய்பவர். வெவ்வேறு நிலைகளிலிருந்தும் வித்யாசம் பாராட்டாதவர். பசுக்கள் குளம்பு கிளப்பிய தூசு படிந்தும், அழகுடன் திகழ்பவர். சிரத்தையான பக்திக்கு மகிழ்பவர், எப்போதும் பக்தர்கள் நலத்தையே எண்ணுபவர், சிந்தாமணியையொத்த பெருமை வாய்ந்தவர், அப்பெருமான். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

6. ஸ்நான வ்யாகுல யோஷித்வஸ்த்ர முபாதர யாகமுபாரூடம்
வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாது முபாகர் ஷந்தம் தா:
நிர்தூத த்வய சோக விமோஹம் புத்தம் புத்தே ரந்தஸ்தம்
ஸத்தாமாத்ர சரீரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
நீராடிக்கொண்டிருக்கும் கோபிகைகளின் துணிகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியவர், அவற்றைப் பெற விரும்பி, துணியில்லாத உடம்புடன் கரையேற தவிக்கும் அந்த கோபியரை இழுத்த வண்ணம் விளையாடுகிறார். அவருக்கு சோகமோ, மோகமோ இல்லை, ஞானமே உருவானவர், புத்தியிலுரைபவர் எங்கும் உள்ளார் என்று மட்டும் உணரத்தக்கவர். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

7. காந்தம் காரண காரணமாதிமநாதிம் காலகனாபாஸம்
காலந்தீ கத காலிய சிரஸி ஸுந்ருத்யந்தம் முஹரத்யந்தம்
காலம் கால கலாதீதம் கலிதாசேஷம் கலிதாதோஷக்னம்
காலத்ரய கதிஹேதும் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
காரணங்களுக்கெல்லாம் மூல காரணமானவர், முதலானவர். ஆனால் முதல் இல்லாதவர்; கருநீல முகில் போன்ற அழகிய திருமேனி படைத்தவர், யமுனை நதியில் காளிங்கன்மேல் களிநடனம் புரிந்தவர், எல்லா காலமுமானவர், ஆனால் காலத்துளிகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாம் அறிந்தவர், கலியின் கொட்டத்தை முடக்கியவர். முக்காலங்களிலும் செயல்படும் அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

8. பிருந்தாவனபுவி ப்ருந்தாரக - கண - பிருந்தா ராதிக வந்த்யாயாம்
குந்தாபாமலமந்தஸ்மேர ஸுதானந்தம் ஸுமஹானந்தம்
வந்த்யாக்ஷே மஹாமுனி மானஸ வந்த்யானந்த பதத்வந்த்வம்
நந்த்யாக்ஷே குணாப்திம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
தேவர்கள், சித்தர்கள் முதலியோரால் போற்றிப் புகழப்பட்ட பிருந்தாவனத்தில் குந்த புஷ்பமென தூய புன்சிரிப்புடன் பேரானந்தம் கொண்டு, அனைத்து முனிவர்கள் மனதிலும் நின்று நிலைபெற்ற திருவடிகளையுடைய, குணக்குன்றான கோவிந்தனை வணங்குங்கள்.

9. கோவிந்தாஷ்டகமேத ததீதே கோவிந்தார்பித சேதா யோ
கோவிந்தாச்யுத மாதவ விஷ்ணோ கோகுல நாயக க்ருஷ்ணேதி
கோவிந்தாங்க்ரிஸ ரோஜ த்யான ஸுதாஜலதௌத ஸமஸ்தாகோ
கோவிந்தம் பரமானந்தாம்ருத மந்த : ஸ்தம் ஸ தமப்யேதி

கோவிந்த, அச்யுத, மாதவ, விஷ்ணோ, கோகுலநாயக, கிருஷ்ணன் ஆகிய கோவிந்தன்பால் மனம் வைத்து இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
Tags:    

Similar News