வழிபாடு
வடலூர் சத்தியஞான சபை ஜோதி தரிசனம்

வடலூர் சத்தியஞான சபை தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

Published On 2022-01-15 02:41 GMT   |   Update On 2022-01-15 02:41 GMT
பொது மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர், வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (15-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொரோனா தொற்று காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. சத்திய ஞானசபை வளாகத்திற்குள் வெளி நபர்கள் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை.

உள்ளூர் நபர்கள் அன்னதானம் பார்சல் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்...வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
Tags:    

Similar News