செய்திகள்
தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றதையடுத்து, எஸ்.கே பிரபாகர் ஐ.ஏ.எஸ் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர். மேலும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் எஸ்.கே.பிரபாகர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் எஸ்.கே.பிரபாகரனை நேரில் சந்தித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.