ஆன்மிகம்
கும்பகோணம் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம்
கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவிலில் தை மாதம் தை பச்சை பால்குட உற்சவம் நடைபெற்றது.
கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தை பச்சை பால்குட உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பால்குட உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து விஸ்வநாதர் காலனி, பேட்டை வடக்கு தெரு, இ.பி. காலனி உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் 100-க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
இதையொட்டி கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து விஸ்வநாதர் காலனி, பேட்டை வடக்கு தெரு, இ.பி. காலனி உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் 100-க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.