செய்திகள்
தற்கொலை

சேர்வலாறு மலையில் மின்வாரிய ஊழியர் தற்கொலை

Published On 2021-07-10 09:46 GMT   |   Update On 2021-07-10 09:46 GMT
சேர்வலாறு மலையில் மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

சேர்வலாறு மலையில் உள்ள மின் வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருபவர் வள்ளிமுருகன் (வயது 45). இவர் சேர்வலாறு மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

இவர் நேற்று தனது குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக தற்கொலை செய்தார் என்ன காரணம் என்று தெரியவில்லை. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News