செய்திகள்
கோல் அடிக்கும் முனைப்பில் இரு அணி வீரர்கள்

ஐஎஸ்எல் கால்பந்து -நார்த்ஈஸ்ட் , மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமன்

Published On 2019-11-27 16:24 GMT   |   Update On 2019-11-27 16:24 GMT
அசாமில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
கவுகாத்தி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் 9 மற்றும் 42-வது நிமிடங்களில் நார்த்ஈஸ்ட் அணியினர் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணியின் செர்மிடி 22, 32 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 2-2 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
Tags:    

Similar News