ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கனகதுர்க்கையம்மன் கோவிலில் சாந்தி அபிஷேகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உள்ள கனகதுர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 7-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நவராத்திரி உற்சவம் நடந்தது. அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று கனகதுர்க்கையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று கனகதுர்க்கையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு. மதுசூதன்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.