செய்திகள்
தமிழகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
* தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக்குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.
* கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும்.
* நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசிக்கான தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
* தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மிகக்குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.
* கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்...30 மாவட்டங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்தது