செய்திகள்
தற்கொலை

வெள்ளகோவிலில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-11-16 09:04 GMT   |   Update On 2019-11-16 09:04 GMT
வெள்ளகோவிலில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் மணிவேல்(வயது 33). கட்டிட தொழிலாளி.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மணிவேல் மட்டும் வீட்டில் இருந்தார். மாலையில் வேலை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மணிவேல் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைபார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News