செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளை
கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூபாலன் நகரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் செல்லாராம். நேற்று இரவு அவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்தனர்.
கடையின் பணம் இல்லாததால் அங்கிருந்த விலை உயர்ந்த மின் வயர் பண்டல்களை அள்ளிச் சென்றனர். திருடுபோன மின் வயர்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.
மேலும் அதே கட்டிடத்தில் உள்ள மளிகை கடை உள்பட 2 கடைகளின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைக்க முயற்சி செய்திருந்தனர். பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மளிகை கடையின் அருகே வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் தண்ணீர் கேன்களை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர்.
கொள்ளை கும்பல்லோடு வாகனத்தில் வந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.