செய்திகள்
பயிற்சி பெறும் ஆசிரியர்கள்.

வெள்ளகோவிலில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி

Published On 2021-09-09 07:32 GMT   |   Update On 2021-09-09 07:32 GMT
மூன்றாம் கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 6 முதல் 10-ம் வகுப்புகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி 5 நாள் நடைபெறுகிறது. அந்தவகையில் இதற்கான பயிற்சி வெள்ளகோவில் ஒன்றியத்திலுள்ள 4 உயர்நிலைப் பள்ளிகளிலும், 4 மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

இதில் 300 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித் துறையினர் செய்தனர்.
Tags:    

Similar News