செய்திகள்
விபத்தில் பலியான அரவிந்த்.

தாராபுரம் அருகே பரிதாபம்-வேனின் பின்னால் பைக் மோதி டெய்லர் பலி

Published On 2021-08-10 09:06 GMT   |   Update On 2021-08-10 09:06 GMT
அரவிந்த் தாராபுரம் சென்று தனது அக்காவை பார்த்து விட்டு நண்பரை பார்ப்பதற்காக சோமநூத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தாராபுரம்:

திருப்பூர் டி.எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, ஆட்டோ டிரைவர். இவரது மகன் அரவிந்த் (வயது 21). டெய்லர். இவரது சகோதரி திருமணமாகி தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் தற்போது பிரசவத்திற்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அரவிந்த் தாராபுரம் சென்று தனது அக்காவை பார்த்து விட்டு நண்பரை பார்ப்பதற்காக சோமநூத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரம் நின்ற வேனின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News