செய்திகள்
துரைமுருகன்

எனது சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவிலேயே தெரிவித்துவிட்டேன்- துரைமுருகன்

Published On 2020-12-29 16:45 GMT   |   Update On 2020-12-29 16:45 GMT
எனது சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவிலேயே தெரிவித்துவிட்டேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:

வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-

நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும், அவரது உடல்நிலை, மனநிலை மற்றும் சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துக்களையும் சொல்ல விரும்பவில்லை. ரஜினிகாந்த் குறித்து பேசுவது முடிந்து போன ஒன்று. முதல்வர் பதவிக்கு நான் ஆசைபடவில்லை.

"திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள். இதையெல்லாம் அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது அவர்களை கண்டிக்க வேண்டும். அவர்களை கண்டிக்கும் அக்கறை இந்த அரசுக்கு கிடையாது. சாயம் அடிப்பது யார் என அரசுக்கு நன்றாக தெரியும்.

என்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்கக்கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுககாரர்கள் டோக்கன் போட்டு, அமைச்சர் படம் போட்டு கொடுக்க இது என்ன அவர்கள் அப்பன்வீட்டு சொத்தா?" என்று கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News