செய்திகள்
டொனால்டு டிரம்ப்

தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

Published On 2021-10-21 04:12 GMT   |   Update On 2021-10-21 06:26 GMT
சமூக வலைதளங்கள் டொனால்டு டிரம்ப் கணக்குகளை முடக்கிய நிலையில், தனி சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.

இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.



மேலும், தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News