உள்ளூர் செய்திகள்
கைது

அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-01-01 08:02 GMT   |   Update On 2022-01-01 08:02 GMT
அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டில் உள்ள அரசு பள்ளி அருகே காணை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த குமரன் மகன் சூர்யா (வயது 19), வீரன் மகன் கார்த்தி (19) என்பதும், அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News