செய்திகள்
கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வண்ணாங்குளம் குன்றுமேட்டை சேர்ந்த பரசுராமன் (வயது 64), கீழ்நகர் பிரபாகரன் (37), முனியந்தாங்கல் ஜெகநாதன் (45), சந்தவாசல் புஷ்பகிரி வனிதா (44), மல்லிகாபுரம் சரவணன் (39), வீரகோயில் முனியாண்டி (46) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 83 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மல்லிகாபுரம் கிராமத்தில் லாரி டியூபில் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக சுரேஷ் (36), மதுவிற்றதாக அம்மாபாளையம் மாணிக்கம்மாள் (60), காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்த தேவகி ஆகியோரை கைது செய்தனர்.