செய்திகள்
பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி பலி
பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், மனைவி கண் முன்னே விவசாயி பலியானார்.
பொங்கலூர்:
குண்டடம் ஜோதிபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). விவசாயி. இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது மனைவி பார்வதியுடன் மோட்டார்சைக்கிளில் கொடுவாய் வந்தார். அங்கு கொடுவாய் -திருப்பூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
பின்னர் தனது மனைவியுடன் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சக்திவேல் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். அவரது மனைவி பார்வதி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குண்டடம் ஜோதிபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). விவசாயி. இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது மனைவி பார்வதியுடன் மோட்டார்சைக்கிளில் கொடுவாய் வந்தார். அங்கு கொடுவாய் -திருப்பூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
பின்னர் தனது மனைவியுடன் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சக்திவேல் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். அவரது மனைவி பார்வதி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.