செய்திகள்
பூட்டியிருந்த கடையில் இருந்து 26 செல்போன்கள் திருட்டு
மதுரை அருகே பூட்டியிருந்த கடையில் இருந்து 26 செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை நரிமேடு மருதுபாண்டியர்நகர் 2-வது தெருவை சேர்ந்த சுந்தரபாண்டியன் மனைவி வளர்மதி (வயது 44). இவர் நரிமேடு பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை வந்துள்ளார். அப்போது பூட்டியிருந்த கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் அவர் கடையின் உள்ளே சென்ற பார்த்த போது அங்கிருந்த மடிக்கணினி மற்றும் 26 செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.