உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அரசு போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள்

Published On 2022-04-16 10:10 GMT   |   Update On 2022-04-16 10:10 GMT
அரசு போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளது.
கரூர் :

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு வரும் 19ந் தேதி முதல் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்-குறிப்பில் கூறியிருப்பது,  

  கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப்-பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ள குரூப் 2, 2 ஏ, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

வரும் இத்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய  பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்-பட்ட வினாத்-தாள்களின் மூலம்  போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் வரும் 19ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கரூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் கரூர் வெண்ணெய்-மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 223555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இவ்வகுப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News