ஆன்மிகம்
திருமலையில் சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

திருமலையில் சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Published On 2021-03-12 07:02 GMT   |   Update On 2021-03-12 07:02 GMT
திருமலையில் உள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் சேத்திராபாலகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சேத்திராபாலகர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா நடந்தது.

அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள் சேத்திராபாலகர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News