உள்ளூர் செய்திகள்
வாலிபர் கைது

வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

Published On 2022-04-17 10:26 GMT   |   Update On 2022-04-17 10:26 GMT
கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை


 காரியாபட்டி மார்க்கெட் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் யோகேஸ்வரன் (24) நேற்று மதியம் டாக்டர் தங்கராஜ் சாலை மாநகராட்சி நீச்சல்குளம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர்  கத்தியை காட்டி மிரட்டி  செல்போன் மற்றும் 4,500 ரூபாயை பறித்துச் சென்றதாக யோகேஸ்வரன் தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். 

 போலீசார் வழக்கு பதிவு செய்து தத்தநேரி அய்யனார் கோவில் தெரு ஆன்றோ சகாயநாதன் மகன் கால்வின் ஜேக்கப் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் தத்தநேரி சதீஷ், ராஜேஷ் என்ற வெள்ளையன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை ஒத்தக்கடை புதுதாமரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (52) தல்லாகுளம் அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி செல்போனை தரும்படி கேட்டனர். பால்பாண்டி மறுத்ததால்  ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு செல்போனை பறித்து சென்றது. 

இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசில் பால்பாண்டி கொடுத்த புகாரின்அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News