செய்திகள்
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ‘விண்வெளித் துறையில் ஏவுகணை நாயகன்’ என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனது பார்வையில் கலாமின் கட்டளைகள்’ என்ற தலைப்பிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அக்னி சிறகுகள் ஒரு பார்வை’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு ‘அப்துல்கலாம் விரும்பிய கனவு இந்தியா’ என்ற தலைப்பிலும் இணைய வழியில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
கட்டுரைகளை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது கண்ண பிரான், ஒருங்கிணைப்பாளர் , ஆ-7, வித்யாசாகர் வீதி, காந்தி நகர் அஞ்சல், உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம் - 642154 என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 8778201926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.