ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி தேரோட்டம் ரத்து

Published On 2021-09-14 06:55 GMT   |   Update On 2021-09-14 06:55 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி கொடியேற்றப்பட்டு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தேரோட்டமும் நடைபெறும். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம்13-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 12-ந்தேதி தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
Tags:    

Similar News